தமிழர்களின் எதிர்காலம் - அனந்தி கருத்து

by Staff Writer 16-12-2018 | 9:51 PM
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு பதவிக்கு வந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மறந்து விட்டதாக முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலரின் ஆதரவுடனும் ஆட்சியில் இப்போது அமைச்சுக்களை தீர்மனிக்கப் போகும் இந்த தருணத்தில் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் புறந்தள்ளப்பட்டு பேரினவாத சக்தியாக மாற்றமடையும் தன்மை தோன்றியுள்ளதாக அவர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.