''கோழி தான் முட்டையிட்டேன் என்று கொக்கரிக்கின்ற விடயத்தில் முட்டைக்கு ஆபத்து ஏற்படுகின்ற சூழல் இருக்கின்றது'' என பாராளுமன்ற உறுப்பினர் செ.அடைக்கலநாதன் குறிப்பிடுகின்றார்.
வவுனியா கோமரசன்குளத்தில் கற்குவாரியால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெறும் கையை அல்லது வெறும் ஆதரவை செலுத்துவதற்காக வாய்ப்பை நிச்சயமாக நாங்கள் செய்திருக்க மாட்டோம் எனக் குறிப்பிட்ட அவர், புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கி கையை கட்டியிருக்கின்ற பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருகாலமும் செய்ய மாட்டாது எனவும் குறிப்பிட்டார்.