இழுபறியில் தொடரும் கூட்டு ஒப்பந்தம்

by Staff Writer 16-12-2018 | 9:59 PM

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

ாஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறாயினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தன.