வௌிநாட்டு சக்திகளின் கவனம் இலங்கை மீது திரும்பியுள்ளது: ஜனாதிபதி

by Bella Dalima 15-12-2018 | 9:48 PM
Colombo (News 1st) வௌிநாட்டு சக்திகளின் கவனம் இலங்கை மீது திரும்பியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அனைவரினதும் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் பிரிவினரும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் நிபுணர்களும் புதிய சவாலை அறிந்துகொண்டு தாய் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். தியத்தலாவை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்த கெடட் உத்தியோகஸ்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.