வடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகள் விநியோகம்

வடமேல் மாகாணத்தில் 10 இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகம்

by Staff Writer 14-12-2018 | 7:44 PM
Colombo (News 1st) வடமேல் மாகாணத்தில் உள்ள சிறிய தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு 10 இலட்சம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புனர்நடுகைக்கென 5 இலட்சம் கன்றுகளும் விசேட திட்டத்தின் கீழ் மேலும் 5 இலட்சம் கன்றுகளும் வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. மாகாணத்தில் உள்ள பிரதேச தெங்கு அபிவிருத்தி சபைகளினூடாக எதிர்வரும் ஜனவரி மாதம் வரை இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தெங்கு முக்கோண பிரதேசத்தில் கடந்த வருடம் நிலவிய வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட தெங்குத்துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.