தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 14-12-2018 | 8:08 PM
Colombo (News 1st) நாளாந்த சம்பளமாக 1000 ரூபா கோரி தோட்டத்தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தினை கைவிடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், யட்டியாந்தோட்டையில் தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். யட்டியாந்தோட்டை - அல்கொல்ல, பூனுகல, வீஓயா, மணல்பொல மற்றும் கல்பா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.