தங்காலை பிரதேச சபையின் ஐதேக உறுப்பினர் கைது

தங்காலை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சமன் குமார கைது

by Staff Writer 14-12-2018 | 3:46 PM
Colombo (News 1st) தங்காலை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சமன் குமார கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பட்டாசு கொளுத்திய சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலை வலுப்பெற்றதையடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.