கே. சிரில் பெரேரா மாவத்தையூடான வீதி மூடப்படுகிறது

கொட்டாஞ்சேனை கே. சிரில் பெரேரா மாவத்தையூடான வீதி மூடப்படுகிறது

by Staff Writer 14-12-2018 | 3:52 PM
Colombo (News 1st) கொட்டாஞ்சேனை - கே. சிரில் பெரேரா மாவத்தை, வாசல சந்தி முதல் வோல்ஸ் லேன் சந்தி வரையான வீதி இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை வரை மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நீர்க்குழாய் பொருத்தும் பணிகளுக்காக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இந்த காலப்பகுதிக்குள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தையூடாக செல்லும் வாகனங்கள், வாசல வீதி சந்தியின் வலது பக்கம் திரும்பி பீல்ட் வீதியூடாக அளுத்மாவத்தைக்கு சென்று முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிக்கு செல்ல முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். முகத்துவாரம் மற்றும் மட்டக்குளிய பகுதிகளிலிருந்து குறித்த வீதிக்கு பிரவேசிக்கும் வாகனங்கள், வோல்ஸ் வீதி சந்தியின் இடது பக்கமாக திரும்பி அளுத்மாவத்தை பகுதிக்கு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்