by Staff Writer 14-12-2018 | 3:42 PM
Colombo (News 1st) இராஜகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (15) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை நள்ளிரவு 12 மணி முதல் நாளை மறுதினம் மாலை 6 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மொரகஸ்முல்ல, எதுல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரிய, நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வீதி திருத்தப் பணிகளுக்காக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.