மாகாண சபை தேர்தலை நடத்தக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாட உத்தேசம்

by Staff Writer 13-12-2018 | 9:02 PM
Colombo (News 1st) மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு உத்தேசித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வி பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.