சப்புகஸ்கந்தயில் ஒருவர் கொலை: விசாரணைகள் ஆரம்பம்

சப்புகஸ்கந்தயில் ஒருவர் சுட்டுக்கொலை: விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 13-12-2018 | 3:46 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த - கல்வல வீதியில் நேற்றிரவு (12) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான 35 வயதான சஞ்சீவ தனுஷ்க என்ற நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கடவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.