நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிப்பார்

உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என நம்புவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

by Staff Writer 13-12-2018 | 7:23 PM
Colombo (News 1st) உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியலமைப்பு, நிறைவேற்றதிகாரம், நீதிமன்றம் ஆகியன ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்கள் என சுட்டிக்காட்டியுள்ள விக்ரமசிங்க, அவை பிரஜைகளின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.