சப்புகஸ்கந்த - கல்வல வீதியில் ஒருவர் சுட்டுக்கொலை

சப்புகஸ்கந்த - கல்வல வீதியில் ஒருவர் சுட்டுக்கொலை

by Staff Writer 12-12-2018 | 9:48 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த - கல்வல வீதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரவு 8 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 35 வயதான சஞ்ஜீவ தனுஷ்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மாகொல பகுதியைச் சேர்ந்த இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒருவர் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சடலம் கடவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.