இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அறிவிப்பை மீறி இன்றும் தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 12-12-2018 | 9:33 PM
Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்த நிலையில், இன்றும் சில பெருந்தோட்டப் பகுதிகளில் மக்கள் தொழிலுக்கு செல்லவில்லை. தலவாக்கலை - வட்டகொட - மடல்கும்பர தேயிலைத் தொழிற்சாலை முன்பாக தோட்டத்தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன்போது கொடும்பாவியொன்றும் எரிக்கப்பட்டது. 1000 ரூபா சம்பள அதிகரிப்புக் கோரி நோர்வூட் சந்தியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இதேவேளை, 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற நுழைவாயில் அருகில் மலையக இளைஞர் ஒருவர் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். தலவாக்கலையைச் சேர்ந்த கணேசன் உதயகுமார் என்ற இளைஞரே இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டார். இன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்.