பிரதேச சபை உறுப்பினர் கொலை: நால்வர் கைது

ஹக்மனயில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலை: பெண் உள்ளிட்ட நால்வர் கைது

by Staff Writer 11-12-2018 | 3:47 PM
Colombo (News 1st) ஹக்மன - கெம்பிலியபொல பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை தெய்யந்தர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 4 ஆம் திகதி L.H. ஷாந்த எனும் பிரதேச சபை உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். 53 வயதான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹக்மன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.