by Staff Writer 11-12-2018 | 3:34 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் சிறுவனொருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (10) மாலை சிறுவன் கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சிறுவன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
4 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப்பரிசோதனை இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.