மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்

by Staff Writer 10-12-2018 | 3:51 PM
Colombo (News 1st) கொழும்பு - மட்டக்குளி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.