தம்பரஅமில தேரர் தாக்கல்செய்த மனு ஜனவரியில் விசாரணை

தம்பர அமில தேரர் தாக்கல்செய்த மனு ஜனவரியில் விசாரணை

by Staff Writer 10-12-2018 | 3:29 PM
Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், தம்பர அமில தேரர் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று (10) தீர்மானித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸவைப் பிரதமராக நியமித்தமை சட்டத்திற்கு எதிரானது எனவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியமை மற்றும் அமைச்சரவையை நீக்கியமை ஆகியன சட்டவிரோதம் எனவும் உத்தரவிடுமாறு கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிசிர டி ஆப்ரூ, புவனேக அலுவிஹாரே மற்றும் மூர்து பெர்ணான்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.