தேயிலைச் செய்கையில் ஈடுபடுவோருக்கு நிவாரணம்

தேயிலைச் செய்கையில் ஈடுபடுவோருக்கான நிவாரண வேலைத்திட்டம்

by Staff Writer 09-12-2018 | 7:29 AM
Colombo (News 1st) தேயிலைச் செய்கையில் ஈடுபடுவோருக்கான நிவாரணத்திற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறு தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வரட்சிக் காலங்களிலும் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், தேயிலை செய்கையை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறு தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.