250,000 ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி

பெரும்போகத்தில் 250,000 ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தியை முன்னெடுக்க நடவடிக்கை

by Staff Writer 08-12-2018 | 4:15 PM
Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்தில் 250,000 ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேவையில் 50 வீதம் பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் 80 ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.