சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 08-12-2018 | 8:23 AM
Colombo (News 1st) கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 16.8 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வௌியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவானோர் வருகை தந்துள்ளனர்.