by Chandrasekaram Chandravadani 08-12-2018 | 1:40 PM
இத்தாலியில் உள்ள இரவுநேரக் களியாட்ட விடுதியில் சனநெரிசலில் சிக்கி 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அன்கோனா நகரிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, களியாட்ட விடுதியினுள் 1,000க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.