இரணைமடு குளத்தின் 5 வான் கதவுகள் திறப்பு

by Bella Dalima 08-12-2018 | 4:00 PM
Colombo (News 1st) இரணைமடு குளத்தின் 5 வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதற்தடவையாக 36 அடியைத் தாண்டியுள்ளது. இதனையடுத்து, 5 வான்கதவுகள் இன்று முற்பகல் திறக்கப்பட்டதாக இரணைமடு குளத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் சிதம்பரநாதன் பரணீதரன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார். இரணைமடு குளம் புனரமைக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு நேற்று (07) கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 1902 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குளத்தின் நிர்மாணப்பணிகள் 1922 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2198 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரணைமடு குளம் புனரமைக்கப்பட்டது. இரணைமடு குளத்தினூடா சுமார் 9000 விவசாயக் குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.    

ஏனைய செய்திகள்