இரத்த தானம் செய்யுமாறு மக்களிடம் கோரிக்கை

இரத்த தானம் செய்யுமாறு தேசிய இரத்த வங்கி மக்களிடம் கோரிக்கை

by Staff Writer 08-12-2018 | 4:10 PM
Colombo (News 1st) நாட்டில் இரத்த தான முகாம்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது. இதனால் இரத்த வங்கியின் வைப்பிலுள்ள குருதியின் அளவு குறைவடைந்துள்ளதாக தேசிய இரத்த வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். மாதாந்தம் சுமார் 75 இரத்த முகாம்கள் கடந்த காலங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், தற்போது 55 முகாம்கள் வரை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பிரதேசத்திலுள்ள இரத்த வங்கிக்கு சென்று இரத்த தானம் செய்யுமாறு தேசிய இரத்த வங்கி மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் 106 இரத்த வங்கிகள் இயங்குவதாக தேசிய இரத்த வங்கி மேலும் தெரிவித்தது.