2778 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

by Staff Writer 06-12-2018 | 9:43 AM
Colombo (News 1st) பேருவளை - பலப்பிட்டிய கடற்கரையில் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 2778 மில்லியன் ரூபா பெறுமதியானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.