இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது

by Staff Writer 06-12-2018 | 5:00 PM
Colombo (News 1st) இலங்கை மீனவர்கள் 05 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அந்நாட்டு கரையோர காவல்துறையினரால் கடந்த 4 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று சென்னை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார். பருத்தித்துறையிலிருந்து குறித்த படகு கடற்றொழிலுக்கு சென்றுள்ளது. நீண்டநாள் மீன்பிடி படகில் சென்றவர்களே இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.