பாராளுமன்றில் சமர்ப்பிக்கவிருந்த பிரேரணையை பிற்போட்ட ஐதேக

by Staff Writer 05-12-2018 | 8:55 PM
Colombo (News 1st) இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த பிரேரணையை பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்தது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடியபோதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இன்றும் சபை நடவடிக்கைகளையும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் புறக்கணித்தனர். நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையினால், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு ஜக்கிய தேசியக் கட்சி இன்று தயாராக இருந்தது. எனினும், பிரேரணையை தற்காலிகமாக நீக்கிக்கொண்டு வேறொரு நாளில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்தார்.