பச்சைமிளகாய் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

பச்சை மிளகாய் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 05-12-2018 | 9:47 AM
Colombo (News 1st) தேசிய சந்தையில் பச்சை மிளகாய்க்கு நிலவும் கேள்விக்கிணங்க, பயிர்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 2018/19 ஆம் ஆண்டுகளில் பெரும்போகத்தின்போது 15,000 ஹெக்டேயரில் பச்சைமிளகாய் செய்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சந்தையில் பச்சைமிளகாய்க்கு அதிக கேள்வி நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.