விவசாய உற்பத்திகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம்

விவசாய உற்பத்திகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம்

by Staff Writer 04-12-2018 | 1:21 PM
Colombo (News 1st) விவசாய வலயங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்திகளை ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டு பழ வகைகள், மரக்கறி வகைகளின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் மத்திய நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு விவசாய வலயத்தில் பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகளை ஒன்றிணைத்தல், அவற்றை சந்தைக்கு விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்வதற்காக புதுக்குடியிருப்பு பகுதியில் விவசாய மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.