by Bella Dalima 04-12-2018 | 3:44 PM
Colombo (News 1st) நாளைய தினமும் (05) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த சில அமர்வுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.