அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 04-12-2018 | 12:42 PM
Colombo (News 1st) நடைமுறை சட்டத்திற்கு அமைய மக்களுக்கான சேவையை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து ஆலோசனை மற்றும் கட்டளைகளும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (04) முற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி, நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய நாட்டின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறும் ஜனாதிபதியினால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நாடு மற்றும் மக்க​ளை கருத்திற்கொண்டு கடமைகளையும் பொறுப்புகளையும் எவ்வித தடையுமின்றி நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவைகள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.