by Staff Writer 03-12-2018 | 1:31 PM
Colombo (Nws 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பசில் ராஜபக்ஸவிற்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
நேற்றிரவு சுமார் ஒன்றரை மணித்தியாலம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், எடுக்கவேண்டிய நடவடிக்கைக்ள குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.