Colombo (Nws 1st) ஐக்கிய தேசிய முன்னணியினரின் மக்கள் சந்திப்பொன்று காலியில் இன்று (03) நடைபெற்றது.
காலியில் இந்தப் பேரணி நடைபெற்றபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து காலி மற்றும் கொழும்பில் தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளன.