இன்றைய அமர்வையும் பகிஷ்கரிக்கின்றது ஆளும் கட்சி

இன்றைய சபை அமர்வை பகிஷ்கரிக்கின்றது ஆளும் கட்சி

by Staff Writer 29-11-2018 | 10:32 AM
இன்று நடைபெறும் சபை அமர்வுகளில் பங்கேற்கப்போவதில்லை என ஆளும் கட்சியினர் அறிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ள பிரேரணை சட்டவிரோதமானது என்பதால் ஆளும் கட்சியினர் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப்போவதில்லை எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சியினர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது