சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 28-11-2018 | 5:05 PM
Colombo (News 1st) சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஶ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்திற்கு இலங்கையிருந்து பக்தர்கள் டிசம்பர் மாதம் இறுதியிலும் ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலும் அதிகளவில் யாத்திரை மேற்கொள்கின்றனர். வருடத்தின் ஏனைய காலப் பகுதியிலும் சபரிமலையில் வழிபாடுகளுக்காக பக்தர்கள் செல்கின்றனர். இந்த புனிதத் தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் பொருட்டு, இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தற்காலிகப் பீடமொன்றை அமைப்பது உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.