ஆசிய பசுபிக் ஷிடோர்யூ கராத்தே சாம்பியன்ஷிப்: 5 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் இலங்கை அணி நாடு திரும்பியது

by Staff Writer 28-11-2018 | 8:58 PM
Colombo (News 1st) 14 ஆவது ஆசிய பசுபிக் ஷிடோர்யூ கராத்தே சாம்பியன்ஷிப்பில் (Asia Pacific Shitoryu Karate Championship) பங்கேற்ற இலங்கை அணி இன்று காலை நாடு திரும்பியது. இந்த முறை இலங்கையிலிருந்து 73 பேர் போட்டியிட்டதுடன், அவர்கள் 5 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இந்தோனேஷியாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கராத்தே சாம்பியன்ஷிப்பை ஆசிய பசுபிக் ஷிடோர்யூ கராத்தே சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.