பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையொன்றைக் கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி உத்தேசம்

by Bella Dalima 27-11-2018 | 8:29 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையொன்றைக் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த சூழ்ச்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என நாம் தொடர்ந்தும் கூறி வருகிறோம். ரணிலின் கதிரையில் மஹிந்த அமர்வதோ அல்லது மஹிந்தவின் கதிரையில் ரணில் அமர்வதோ அல்ல அது. நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை. இந்த சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணையை சபையில் கொண்டு வந்து, புதிய பாராளுமன்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை வழங்க நாம் முயற்சிக்கின்றோம்.
என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

ஏனைய செய்திகள்