அபிவிருத்தி யுகத்தை மீண்டும் உருவாக்குவோம்: சஜித் பிரேமதாச தெரிவிப்பு

by Bella Dalima 27-11-2018 | 9:51 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் நீதிக்கான மக்களின் குரல் பேரணியின் இரண்டாவது கட்டம் களுத்துறையில் இன்று நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்தப் பேரணி நடைபெற்றது. களுத்துறையின் இரு பகுதிகளிலிருந்தும் பேரணியாக வந்தவர்கள் பொதுக்கூட்டத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பின்வருமாறு தெரிவித்தார்,
மீண்டும் ஏழை, அப்பாவி மக்களின் அரசாங்கத்தை ஸ்தாபித்து, நிவாரணம் வழங்கும் யுகத்தை, அபிவிருத்தி யுகத்தை மீண்டும் உருவாக்குவோம் என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இந்த நாட்டின் மண்ணை நம்பி வாழும் தந்தையர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் மற்றும் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரினதும் வாழ்வை எழுச்சிபெறச் செய்வோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் கூறிக்கொள்கின்றேன்.