பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான மனு பரிசீலனை

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான மனு பரிசீலனை

by Staff Writer 26-11-2018 | 2:41 PM
Colombo (News 1st) தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு அதிகாரமில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு, எதிர்வரும் 30 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 3ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பேர் அடங்கிய அமைச்சரவை, பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி பி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களால் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.