பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

by Staff Writer 25-11-2018 | 5:06 PM
Colombo (News 1st) அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களையும் நாளை (26) காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.