மாத்தறையில் 19 வயது மாணவர் கத்தியால் குத்திக்கொலை

by Staff Writer 24-11-2018 | 5:20 PM
Colombo (News 1st) மாத்தறை - எலவெல்ல வீதியில் உள்ள தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் கத்தியால் குத்தி 19 வயதான மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர். தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இன்று பிற்பகல் இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 13 இல் கல்வி கற்கும் ரசிது ஹிம்ஹான் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்