சட்டவிரோத வர்த்தகர்களிடமிருந்து 45 இலட்சம் அறவீடு

மட்டக்களப்பில் சட்டவிரோத வர்த்தகர்களிடமிருந்து சுமார் 45 இலட்சம் ரூபா அபராதம் அறவீடு

by Staff Writer 24-11-2018 | 6:35 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதிமன்றத்தினூடாக 44 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது. கடந்த நான்கரை வருடங்களாக சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்ட 212 பேரிடமிருந்து குறித்த தொகை அறவிடப்பட்டுள்ளதாக மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடாமை, எடைகுறைத்து விற்பனை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.