நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தப்போவ உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

by Staff Writer 24-11-2018 | 1:23 PM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் தப்போவ உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவ குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நுவரவெவ, மஹவிலச்சிய, இராஜாங்கனை, மஹகனதராவ, பதகிரிய ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தெபரவெவ, தெதெரு ஓயா, முருதவெல, திஸ்ஸவெவ, வீரவில ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக வசந்த பண்டார பலுகஸ்வெவ குறிப்பிட்டுள்ளார். இந்த நீர்த்தேக்கங்களுக்கு அருகில் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.