சோளப் பயிரில் படைப்புழு தாக்கம்

சோளப் பயிரில் படைப்புழு தாக்கம்: விவசாய ஆலோசனைக்கு அணுகுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 24-11-2018 | 6:21 PM
Colombo (News 1st) படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்​செய்கை பிரதானமாகப் பாதிப்பிற்குள்ளாவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புழுத்தாக்கம் தீவிரமாகப் பரவுவதற்கு முன்னர் சிபாரிசு செய்யப்பட்ட பூச்சிநாசினியை பாவித்து பாதிப்பைக் கட்டுப்படுத்துமாறு விவசாயத் திணைக்களம் செய்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புழுக்களின் பாதிப்பை அவதானித்தால் விவசாய ஆலோசனை சேவை 1920 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அல்லது பிரதேச விவசாய வெளிக்கள உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.