கண்டியில் அரசாங்கத்திற்கு எதிராக ஐ.தே.க பேரணி

by Staff Writer 24-11-2018 | 8:46 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு நடவடிக்கை கண்டியில் இன்று ஆரம்பமானது. ஜனநாயகத்திற்கான நீதியின் மக்கள் குரல் என்ற தொனிப்பொருளின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. கண்டி நகர மத்தியில் நடைபெற்ற கூட்டத்திற்காக, கண்டி எட்மன் சில்வா மைதானம், அம்பிட்டிய மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் பேரணியாக வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கூட்டம் ஆரம்பமானது.