ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை - இலங்கை ஆசிரியர் சங்கம்

by Staff Writer 24-11-2018 | 7:56 AM
Colombo (News 1st) இந்த வருட கல்விபொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைப்பத்திரங்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு, இதுவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். சுமார் 3 மாதங்கள் தாமதமடைந்துள்ள கொடுப்பனவை விரைவில் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜிதவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, ஆசிரியர்களுக்கு கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தநிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.