வௌிநாட்டவர்களை ஈர்ப்பதற்கான செயற்றிட்டங்கள்

வௌிநாட்டவர்களை ஈர்ப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் பணிப்புரை

by Staff Writer 24-11-2018 | 1:19 PM
Colombo (News 1st) சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை தளர்த்துவதற்கும் வௌிநாட்டவர்களை ஈர்ப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றுலாத் துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையும் இதற்கான காரணமென பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த நிலைமையை சீர்செய்யுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.