English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Nov, 2018 | 7:56 am
Colombo (News 1st) இந்த வருட கல்விபொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைப்பத்திரங்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு, இதுவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 3 மாதங்கள் தாமதமடைந்துள்ள கொடுப்பனவை விரைவில் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜிதவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, ஆசிரியர்களுக்கு கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.
01 Jul, 2021 | 07:00 PM
20 Feb, 2019 | 06:58 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS