சோள உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு சலுகைகள் 

சோள உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு சலுகைகள்: அமைச்சரவை அனுமதி

by Staff Writer 23-11-2018 | 4:05 PM
Colombo (News 1st) உள்நாட்டு சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சோள இறக்குமதியை குறைப்பது மற்றும் உள்நாட்டு சோள உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பது இதன் நோக்கமாகும். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.