கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

by Staff Writer 23-11-2018 | 3:47 PM
Colombo (News 1st) பொத்துவில் முதல் திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது. வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.